வியாழன், 29 செப்டம்பர், 2011

சர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்-ஆய்வு

சர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்-ஆய்வு

September 27, 2011

துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.
துளசி இலையில் உள்ள ‘ஆசிமம் சாங்டம்’ (ஞஸ்ரீண்ம்ன்ம் ள்ஹய்ஸ்ரீற்ன்ம்) என்ற சத்து சர்க்கரை நோயைக் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
சர்க்கரை நோயால் இந்தியாவில் சுமார் 4 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். சர்க்கரை நோய் அதன் உச்சத்தில் இருதயம், கண்கள், கிட்னி, நரம்புகள் மற்றும் பாதம் ஆகியவற்றில் மோசமான விளைவுகளை ஏற்பத்தக்கூடியது.
விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான இந்த ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டு பிடித்துள்ளனர்.
துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.
ஆய்வில் எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழு முதலில் ‘ஸ்ட்ரெப்டோசோசின்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்ர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையின் இவர்கள் கண்டுபிடித்த இந்த முக்கியமான மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறக்கப்பட்டதிருந்ததோடு, முக்கிய உடலுறுப்புகளான கிட்னிக்கள், மற்றும் லிவர் ஆகியவை இந்த துளசி மருந்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி நிறைய பேசியுள்ளது.
ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள ‘அர்சாலிக்’ அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது.
அலர்ஜி, மற்றும் ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.

இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடி

இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடி

March 31, 2011

இந்திய நாட்டின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை செயலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் இந்த விவர அறிக்கையை வெளியிட்டார். இந்த கணக்கெடுப்பின படி இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை – 1.21 பில்லியன்.(121 கோடி ) . இந்திய மக்கள் தொகை 181 மில்லியன் ( 18 கோடியே பத்து லட்சம் ) அதிகரித்துள்ளது, ஆண்களின் எண்ணிக்கை : 62.3 கோடி ; பெண்களின் எண்ணிக்கை : 58.6 கோடி.
சதவிகித குறைப்பு : வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது: கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்சஸ்சின் போது இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 ( 2001 ம் ஆண்டில்) சதவிதத்தில் இருந்து 17.64 ( 2011ம் ஆண்டில் ) சதவீதமாக குறைந்துள்ளது. உலக மொத்த மக்கள் த‌ொகையில் இந்தியா 17. 5 சதவீதம் இந்தியாவில் வசிக்கின்றனர். உலக மக்கள் தொகையில் சீனா மக்கள் தொகை 19.4 சதம் ஆகும்.
5 நாட்டு மக்கள் தொகையை விட இந்தியா டாப்: மொத்தம் 74. 25 சதவீத பேர் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர். இதில் கல்வியறிவு பெற்றவர்களில் பெண்களைவிட ஆண்கள் முன்னணியில் உள்ளனர். அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் கூட்டு மக்கள் தொகை எவ்வளவோ அதனை விட இந்தியா மக்கள் அதிகம் பெற்றுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் பெற்றது ஆகும். உ. பி., மகாராஷ்ட்டிரா மாநில கூட்டு மக்கள் தொகை அமெரிக்காவை விட அதிகம். டில்லியின் வடகிழக்கு பகுதி மக்கள் மிக அடர்த்தியாக வாழும் பகுதி ஆகும். அருணாசல பிரதேசத்தில் டிபங் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் மிக குறைவாக வாழும் பகுதி ஆகும் என்றும் இன்றைய சென்சஸ் விவரத்தில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்-2011) பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிந்தது. முதல் சென்சஸ்: முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது.

விஜயகாந்த் வண்டவாளம் முழுவதும் எனக்கு தெரியும் – நெப்போலியன்.

March 31, 2011

விஜயகாந்த் குறித்த அத்தனை விஷயமும் எனக்குத் தெரியும். அதையெல்லாம் வெளியில் சொல்லத் தொடங்கினால் நாறிப் போயிடும் என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் நடிகர் நெப்போலியன்.
திருக்கோவிலூரில் நடந்த திமுக தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
சினிமாவில் மார்க்கெட் போனதால், வேறு வழியில்லாமல் கட்சி துவங்கிய விஜயகாந்த் உடன் கூட்டணி அமைத்துள்ளார் ஜெயலலிதா. கம்பெனி ஆரம்பிக்கிற மாதிரி அவர் மனைவி, மைத்துனரை வைத்து கட்சி துவங்கி விட்டார். குடும்ப அரசியலைப் பற்றி பேசும் விஜயகாந்த், குடும்பத்துடனே அரசியலை ஆரம்பித்து இருக்கிறார்.
இவரால் கல்லூரிக்கு கூட முதல்வராக முடியாது. அதற்கும் படிப்பு தகுதி வேண்டும். அப்படிப்பட்ட விஜயகாந்த் எல்லோரையும் கிண்டல் செய்கிறார்.
விஜயகாந்த் எங்காவது ஜெயலலிதாவை முதல்வராக்குவேன் என்று சொன்னாரா… இல்லை. ஏன் என்றால் அவர் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இந்த அம்மாவோ அவரை எப்ப எட்டி உதைக்கலாம் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
விஜயகாந்த் 2005ல் கட்சி ஆரம்பிக்கும் வரை மக்களை பற்றி சிந்திக்கவில்லை. படத்துல நடிச்சு முகம் வீங்கி போனதால படவாய்ப்பு குறைஞ்சது. அதுக்கு அப்புறம் கம்பெனி ஆரம்பிக்கிற மாதிரி புதுசா கட்சி ஆரம்பிச்சார்.
இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நான் துணைத்தலைவராக இருந்தேன். இவரது வண்டவாளம் முழுவதும் எனக்கு தெரியும். அதை வெளியில் சொன்னால் நாறிவிடும்.
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் மாணவனை அடிப்பதுபோல் விஜயகாந்த் தனது வேட்பாளரை அடிக்கிறார் என்றார் நெப்போலியன்.

தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்த நாள் நினைவு நிகழ்வு

March 31, 2011
தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்த நாள் நினைவு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி பேராயர் ஜெபநேசன் அடிகளாட்ர் மற்றும் தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாநகரசபை உறுப்பினாகள், யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாகிஸ்தானின் தோல்வியால் இருவர் மரணம்

March 31, 2011

இந்தியாவின் மொஹாலியில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அங்கு இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பெஸாவாரைச் சேர்ந்த 65 வயதான நபர் ஒருவரும், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருமே அவ்வணியின் தோல்வியினால் அதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பாகிஸ்தான் அடைந்த தோல்வியினால் அந்நாட்டு இரசிகர்கள் கொந்தளிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

3 சிப்பாய்களுக்கு மரண தண்டனை !

March 31, 2011
1996ஆம் ஆண்டு உரும்பிராயில் தமிழ் இளம் பெண்ணைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்திக் கொலை செய்த இராணுவத்தினர் மூவ ருக்கு உயர் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யும் உரிமை குற்றவாளிகளுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் ஜனாதிபதி கையெழுத்திட்டதும் இவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
உரும்பிராயைச் சேர்ந்தவரான வெற்றி வேலாயுதம் ரஜனி அல்லது ரஞ்சனி என்ற 24 வயதான இளம் பெண்ணை கோண்டாவிலில் வைத்துக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தார்கள் என்று, இராணுவச் சிப்பாய்கள் மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்தமைக்காக மூவருக்கும் மரண தண்டனை விதித்த நீதியரசர்கள் கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்களுக்காக மேலதிகமாகச் சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தனர்.
உரும்பிராயில் தமது மாமன், சகோதரனுடன் வசித்து வந்த ரஜனி, 1996 செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி காணாமற்போனார்.
கொழும்பு செல்வதற்கு ஆயத்தமான அவர், அது குறித்து உறவினர்களுக்குத் தெரிவிப்பதற்காக மானிப்பாய்க்குச் சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் அவரைக் காணவில்லை என்று பெற்றோரும் உறவினர்களும் தேடினர். பொலிஸாரிடம் முறையிடப்பட்டது. எனினும் இரு வாரங்களாக அவர் பற்றிய தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. அதன் பின்னர், சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் இந்த விவகாரத்தை குடாநாட்டு இராணுவத் தளபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அப்போது தான் இராணுவத் தளபதியாகப் பொறுப் பேற்றுக் கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, உடனடியாக விசாரணை நடத்தியதன் விளைவாக 13 நாள்கள் கழிந்து கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு அருகில் இருந்த வீடு ஒன்றின் மலசலகூடக் குழிக்குள் இருந்து ரஜனியின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவச் சிப்பாய்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ். நீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கு அப்போதைய காலச்சூழல் காரணமாகப் பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டது. அவர்களில் மூவருக்கே தற்போது மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாது என்று நீதிமன்றம் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது. இதனால் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டதும் அது நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பலர் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறைகளில் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் பாடசாலைச் சிறுமியான கிருஷாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயும் அவர்களில் அடங்குவார்.

இராணுவத் தலையீடு அதிகம் அதனால் மக்கள் பயப்பீதியில்

March 31, 2011
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளதால் மக்கள் மத்தியில் பய உணர்வு இன்னும் அகலவில்லை என்று, நேற்று யாழ்.வந்த சர்வ மதக்குழுவினரிடம் தெரிவித்தார் அருட் திருபோல் நட்சத்திரம்.
கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட சர்வமதக் குழுவினர் வடக்கு நிலைமைகளை நேரில் கண்டறியும் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் வன்னிக்குச் சென்ற அவர்கள் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
அவர்களுக்கும் யாழ். மாவட்டத்தில் உள்ள சர்வமதக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நகரின் மத்தியில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது. யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் காணப்படும் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் கொழும்பில் இருந்து வந்தவர்களுக்கு விளக்கப்பட்டது.
அங்கு கருத்துத் தெரிவித்த அமலமரித் தியாகிகள் சபையின் பகுதி முதல்வர்
போல் நட்சத்திரம் கருத்துத் தெரிவித்தார். “அமைதி என்பது வெளிப்படையாகக் காணப்படும் மௌனம் அல்ல. மனித உள்ளங்களில் அது அனுபவிக்கப்பட வேண்டும். சமாதானம் இருக்கும் இடத்தில் ஒற்றுமையும் ஒன்றித்த நிலையும் இருக் கும்; பயம் இருக்காது. ஆனால், போர் முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த போதும் வடபகுதி மக்கள் பயத்துடனேயே வாழ வேண்டியுள்ளது” என்றார் அவர்.
குடாநாட்டு மக்களின் குடும்ப, சமூக விவகாரங்களில்கூட இராணுவத்தினர் மூக்கை நுழைத்துத் தலையிடுவதே பயத்துக்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குடும்பச் சண்டைகளில் கூட இராணுவத்தினர் தலையிடுகின்றனர் என்பதை அவர் அங்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
பயம் இருக்கும் இடத்தில் உண்மை, நேர்மை, புரிந்துணர்வு என்பன இருக்காது என்பதையும் அவர் ஆணித்தரமாக அங்கு எடுத்துரைத்தார்.
“நாட்டில் அமைதி ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்ற போதும் வடக்கில் மக்கள் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் அமைதியினைச் சுவைக்கவில்லை” என்று அங்கு கருத்துத் தெரிவித்தார் ஊர்காவற்றுறை சென் மேரிஸ் பங்குத் தந்தை அருட்திரு சி.ஜி. ஜெயக்குமார்.
அமைதி ஏற்பட்டுவிட்டபோதும் மண்டைதீவில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் உள் ளனர் என்பதை அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.
“அண்மையில் இளம் ஆசிரியர் ஒருவரின் மரணத்தில் சந்தேகங்கள் ஏற்பட்டன. ஆனால், அது தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. தடுப்பு முகாம்களில் விசாரணை இன்றிப் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் திடீரென இறந்துள்ளனர். காரணம் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது தமிழ் மக்கள் எப்படி அமைதியை உணர, சுவைக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் அருட்தந்தை.
சிங்கள தமிழ் மக்கள் இடையே புரிந்துணர்வைக் கட்டி எழுப்ப பௌத்த மதம் அதிகம் பங்காற்ற முடியும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசிய பௌத்த பிக்கு ஒருவர், “30 வருடங்களாகப் போர் இடம்பெற்றுள்ளது. இப் போது அனைத்தும் 24 மணி நேரத்தில் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார்.

கடாபியின் சொத்துக்கள் ரூனிசியாவிலும் முடக்கம் !

March 31, 2011

டென்மார்க் 31.03.2011 வியாழன் மாலை
கடாபி தனது சொத்துக்களை உலகத்தின் பல நாடுகளின் வங்கிகளில் போட்டு வைத்துள்ளார். என்றாவது ஒரு நாள் தனக்கு இந்த நிலை வரும் என்று கருதி அவர் செய்த முன்னேற்பாடுகளே இன்று அவருக்கு மிகப்பெரிய சவாலாக வந்துள்ளன. கடாபியின் சொத்துக்கள் வைக்கப்பட்டுள்ள நாடுகளில் முக்கியமானது லிபியாவின் அயல் நாடான ரூனிசியாவாகும். நேற்று அந்த நாட்டின் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் பெய்சி கெய்ட் சப்ஜி தமது நாடும் கடாபியின் சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அறிவித்தார். இதுபோல நாட்டில் உள்ள சொத்துக்களை எல்லாம் சுரண்டி ரூனீசியாவில் முதலிட்ட பல நூற்றுக்கணக்கான கடாபி குடும்பத்தினரின் சொத்துக்களும் உறைய வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். லிபியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தம்மால் செய்யக்கூடிய சிறிய சேவை இதுவென்றும் அவர் கூறினார்.
உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட பிரதான காரணம் உலகத்தின் முக்கால் பங்கு சொத்து சுமார் நூறுபேரிடம் போய்ச் சிக்குப்பட்டுவிட்டது. இது பொருளாதார கொள்கைகளை வகுத்தோர் விட்ட அடிப்படைத் தவறாகும். இன்று நடைபெறும் ஆர்பாட்டங்கள் இந்தச் சொத்துக்களை வேட்டையாடி வருகின்றன. உலகத்தின் இரண்டாவது பணக்காரரான பில் கேய்ட்ஸ் மூன்றாவது பணக்காரரான வாரன்பஃபேயை சந்தித்து உங்கள் சொத்துக்களை பொதுநல வாழ்வுக்கு செலவிடுங்கள் என்று சென்ற வாரம் கேட்டுக் கொண்டது இந்த அசைவின் ஓரங்கமாகவே இருக்கிறது. உலகின் முதலாவது பணக்காரர் கார்லோஸ் மெக்சிக்கோவில் இருக்கிறார். சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் இதுபோன்ற அரசியல் பண முதலைகள் நிறைய உள்ளன. பொருளாதார மந்தம் என்ற பள்ளத்தில் இருந்து ஏறி வரும் அசுர தாகம் கொண்ட முதலைகளாக இந்த ஆர்பாட்டங்களும் போர்களும் உள்ளன.
வன்னிப்போரில் புலிகள் சேகரித்து வைத்த எண்ணற்ற கிலோ தங்கம், கோடான கோடி பணம், ஆயுதங்கள் யாவுமே அவர்களுக்கு எதிரிகளாக மாறின. கடைசியில் அவர்களுக்கு பயங்கரவாதி பட்டத்தைக் கட்டி அனைத்தையும் கொள்ளையிடவும் அதுவே காரணமாக அமைந்தன. வன்னியில் இருந்த சொத்துக்கள் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டதும் இதுபோன்ற ஓர் அவலத்தின் விளைவே. அதேவேளை புலிகளின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட இடங்களை நோக்கியும் இந்தத் தாகம் கொண்ட முதலை வரும். இன்றய உலகில் அளவுக்கு அதிகமான பொருளாதார பலமே அனைத்து அழிவுகளுக்கும் காரணமாக அமைகிறது.

ஆஸாட்டின் ஆசாடபூதித்தனம் மக்கள் கொதிப்பு !

March 31, 2011

டென்மார்க் 31.03.2011 வியாழன் மாலை
சிரிய அதிபர் அஸாட் மக்கள் முன்னிலையில் உரையாற்றப்போகிறார், அவசரகால சட்டத்தை விலக்கப்போகிறார் என்று எதிர் பார்த்தவர்கள் வாயில் மண் விழுந்திருக்கிறது. சிரிய அதிபரின் வேடம் ஓர் உருத்திராட்சப் பூனை வேடம் என்று நேற்று முன்தினமே அலைகளில் எழுதியிருந்தோம். அதுபோலவே அவருடைய செயற்பாடும் இருந்தது.
மக்களுக்காக உரையாற்றிய அவர் 50 வருடங்களாக அமலில் இருக்கும் கிழடுதட்டிப்போன அவசரகால சட்டத்தை அகற்ற முடியாது என்று தெரிவித்தார். அவசரகால சட்டத்தை பயன்படுத்தி படுகொலைகள், ஆள்கடத்தல், உரிமைகளை கேட்போரை சிறையில் அடைத்தல் போன்ற கொடுஞ்செயல்களை சிரிய இராணுவம் செய்து வருகிறது. சிரிய அதிபர் ஆஸாட்டின் ஆசாடபூதித் தனமான ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருப்பது அவசரகாலச் சட்டமே. அதை எடுத்தால் மக்கள் போராட்டம் வீதியில் பெருமெடுப்பில் இறங்கும் என்பது அவருக்கு தெரியும்.
அவருடைய பித்தலாட்டத்தனமான உரையைக் கேட்டு வேதனையடைந்த மக்கள் தமக்கு உரிமை வேண்டும் என்று வீதிகளில் கோஷமிட்டு சென்றனர். அவர்களை நோக்கி சிரிய இராணுவம் சகட்டு மேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.
அண்ணன் அதிபர், தம்பி அடுத்த பெரியவர், இன்னொருவர் இராணுவத்திற்கு பொறுப்பு, பொருளாதாரத்திற்கு அடுத்த குடும்பத்தவர் என்று லிபியாவில் கடாபி தனது குடும்பத்தால் ஒரு நாட்டையே ஆட்சி செய்த அதே அவலமே சிரியாவிலும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் லெபனான் பிரதமர் படுகொலை உட்பட பல குற்றச் செயல்களில் சிரியத் தலைமைக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆஸாட்டின் உரை ஜனநாயக ஆர்வலருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை வெள்ளி தொழுகை முடிந்ததும் சிரியாவில் அடுத்த கட்ட ஆர்பாட்டங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை தானும் மக்களை திரட்டி, ஆஸாட் பதவி விலகக்கூடாது என்ற போலி ஆர்பாட்டம் ஒன்றையும் இவர் ஒழுங்கு படுத்தியுள்ளார். மக்களுக்கு எதிராக மக்களையே கொம்பு சீவிவிட வசதியாக இவருக்கு முஸ்லீம்களிடையே உள்ள சியா – சன்னி பிரிவுகள் உதவியாக உள்ளன.

லிபிய போராளிகளும் மக்களும் நல்லுறவு – சற்லைற்

March 31, 2011

டென்மார்க் 31.03.2011 வியாழன் மாலை
லிபிய போராளிகளும், அங்குள்ள பொது மக்களும் எவ்வாறு உறவாடுகிறார்கள் என்பதை அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ கடந்த மூன்று வாரங்களாக அவதானித்து அதிபர் ஒபாமாவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளன. லிபியத் தரையில் போராளிகள் பொதுமக்கள் உறவை பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப்போல சற்லைற்றுக்கள் அவதானித்துள்ளன. அதுபோல உளவாளிகளும் மக்களோடு மக்களாக நடமாடி உண்மை நிலவரத்தை சேகரித்துள்ளார்கள். 40 வருடங்களாக சர்வாதிகார ஆட்சியால் நொந்து நூலாகிப் போன மக்கள் அச்சம் காரணமாக தமது உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் போராளிகளுடைய வெற்றியை இதயத்தால் விரும்புகிறார்கள் என்பதையும் தமது குறிப்புரையில் வழங்கியுள்ளார்கள்.
இவற்றை எல்லாம் நன்கு பகுப்பாய்வு செய்த பின்னரே போராளிகள் கைகளில் ஆயுதம் இருக்கலாம் என்ற கொள்கைக்கு அமெரிக்க அரசு வந்துள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.
இதுபோல..
வன்னியில் கடைசிப் போரின்போது நடைபெற்ற ஒவ்வொரு அசைவையும் அங்குல நிலப்பரப்பு மீதமில்லாமல் சற்லைற்றுக்கள் படம் பிடித்திருக்கும் என்பது தெரிந்த விடயமே. 2009 மே 17, 18ம் திகதிகளில் நடைபெற்ற கிளைமாக்ஸ் காட்சிகள் அமெரிக்க சற்லைற்றுக்களின் கைகளில் இருக்கும். ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வை, அது ஓர் அறைக்குள் நடந்தாலும் ஒட்டுக் கேட்கும் ஆற்றல் படைத்த செவ்வியல் சற்லைற்றுக்கள், உலக வல்லரசுகளையே வேவு பார்க்கும் எக்கோலக் சற்லைற்றுக்கள் யாவும் வானில் உலாவருகின்றன. எச்.டி. பிலிம் தரத்தில் வன்னிப்போரை சற்லைற்றுக்கள் பதிவு செய்திருக்கும். போரின் பின் புலிகளின் சொத்துக்களை கொள்ளையடித்தது, லாரிகளில் ஏற்றிச் சென்றது, பிணங்களை எரியூட்டியது, இந்திய இராணுவத்தின் பங்களிப்பு, சொத்துக்காக நடந்த சண்டைகள் என யாவும் உலகின் நீண்ட திரைப்படமாக இருக்கும். பிரபாகரன் எங்கே என்ற கேள்விக்கும் பதில் அங்குதான் இருக்கும். லிபியா போராளிகள் மக்கள் உறவையே அவதானித்த சற்லைற்றுக்கள் வன்னியை மட்டும் சும்மாவா விட்டிருக்கப்போகின்றன.

செலக்டிவ் அம்னீசியாவில் சோனியாவும் சில ஈழத்தமிழர்களும் ச.ச.முத்து

March 31, 2011

பாவம் சோனியாகாந்தி!, போனவாரம் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்னர் அவருக்கு சிறீலங்காவில் ஈழத்தமிழினம் என்ற ஒன்றே இருப்பது தெரியாது!
பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் உரையாற்ற இங்கிலாந்து வருவதற்கு
முதல் அவருக்கு இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்துக்கு நடைபெறும் எந்தவொரு
அநீதியும் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.பாவம் அவர்.1987முதல் 1989வரை
தமிழீழமண்ணில் கொடும் கற்பழிப்புகளும்,கொலைகளும் நடாத்தி காட்டாட்சி
செய்த இந்தியஅமைதிப்படையைப்பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை
சரி அதைவிடுவோம்.அதற்குபிறகுதன்னும் இந்தியாவில் இருந்து கொண்டு
தமிழீழவிடுதலைப்போராட்டத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்காக தமிழ்நாட்டிலும்
தமிழ்ஈழத்திலும் அரங்கேற்றப்பட்ட எந்தஒரு சதியும் இவருக்கு தெரியாமல்தான் – ரோ செய்திருக்கும்.
எல்லாவற்றையும்விட,2006 நடுப்பகுதிக்கு பின்னர் மாவிலாற்றிலிருந்து தமிழர்நிலங்
களை அபகரித்தபடி தமிழ்மக்களை கொன்றொழித்து முன்னேறிவந்த சிங்களப்
படைகளுக்கு ஆயுதஉதவிகளும்,ஆளணி,நிபுணத்துவ உதவிகள் எதுவும் பாரதம்
செய்ததும் இவருக்கு தெரியாமல்தான் நடந்திருக்கும்.கிளிநொச்சியை வீழ்த்தும்
போரின்போது இந்தியஜவான்கள் சிங்களப்படைகளுடன் கூட்டாக செயற்பட்டதும்
அதிலிருந்து முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைவரை அவர்களே நின்று செயற்படுத்தியதும் பாரதஅன்னை சோனியாவுக்கு தெரியாமல்தான் நடந்தி
ருக்கும்.
அதற்கு பின்னர்கூட புதியபுதிய அணிகள்மூலம் தமிழீழதேசியத்தை
சிதைக்க இந்தியா எடுத்துவரும் எத்தனங்கள் எதுவும் அவருக்கு தெரியாததுதான்.சிங்களபடைகளின் தற்போதைய கெடுபிடிகளுக்கும்,ராணுவஅடக்
குமுறைக்கும் எதிராக மக்கள் திரண்டெழுந்துவிடாமல் பெட்டிக்குள் வைத்திருப்ப
தற்காக அடிக்கடி இந்தியவெளியுறவு செயலர் நிருபமாராவ் சென்றுவருவதும்
சோனியாவுக்கு தெரியாமல் வெளியுறவுஅமைச்சர் கிருஸ்ணா தனது எண்ணத்தின்
படியே செயற்படுத்தும் திட்டங்கள்தான்.பாவம் சோனியா,அவருக்கு ஏதேனும் ‘செலக்டிவ் அம்னீசியா’இதுநாள்வரைக்கும் இருந்திருக்கலாம்.அதாவது ஒரு குறிப்பிட்டவிடயங்கள்மட்டுமே மறந்துவிடுகின்ற வியாதிமாதிரி ஏதேனும் இருந்திரு
க்கலாம். இப்போது அவருக்கு சிவசங்கர் மேனனையும்,நாராயணணையும்கூட
மறந்திருக்கும்.
பாவம் சோனியா. பேரப்பிள்ளைகளுக்கும், பிள்ளைகளுக்கும் மந்திரி
பதவி யாசிப்பதற்காக டெல்லிக்கு ஓடியோடி வந்த கலைஞர் முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் விடுதலைப்போராட்டமும் சிதைக்கப்பட்ட
பொழுதும், தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோதும் இருந்த இடத்தில் இருந்தபடியே
ஏழுதி அனுப்பிய கடிதங்களைக்கூட சோனியா அம்மா மறந்திருப்பார்.
இப்படியாக எதுவுமே தெரியாத சோனியா அண்மையில் இங்கிலாந்து வந்தபோது
தான் அவருக்கு ஈழத்தமிழர்கள் என்றொரு இனம்இருப்பதும், அவர்களை மகிந்த என்றொரு கொடுங்கோலன் அழித்துவருவதும் தெரிந்திருக்கின்றது என்பதுபோல
அறிக்கைகளும்,பேட்டிகளும் அண்மைக்காலத்தில் முளைத்துள்ளன.
பலம் எதுவுமே இல்லாமல் வெற்று இராசதந்திரம் மட்டுமே செய்ய வெளிக்கிட்ட
ராசதந்திரப் பெருமான்கள் இதற்கும் ஏதேனும் இராசதந்திர நொக்கத்தையும்,
இதற்கு பின்னுக்கு யாருக்கும் தெரியாத (குறிப்பாக சாதரணமக்களுக்கு புரியாத
ஏதேனும் ஈழத்துவிடுதலை ரகசியம்)ஏதோ ஒரு பகடையாட்டம் இருப்பதுபோன்ற
வெற்று மௌனத்தையும், காரணங்களையும் கற்பிக்கலாம்.
இதற்குபின்னுக்கு இருக்கும் ஏதோ பெரிய நோக்கங்கள் எதுவுமே இருக்கமுடியாது.
எமது மக்கள்மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் முக்கிய
பங்குதாரர்கள் இந்தியஆளும் வர்க்கம்தான். பெயருக்கு இந்த இறுதிப்போரை
சிங்களம் நடாத்தினாலும் இதற்கு சகல திட்டமிடல்களையும், ஒத்துழைப்பையும்
வழங்கி நேரடியாக நின்றது பாரதம்தான். இதன் பாதிப்பு இன்று இல்லாவிட்டாலும்
என்றாவது ஒருநாள் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் தோன்றக்கூடும் என்று இந்தியமத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
அதனை தடுத்துநிறுத்துவதற்காகவும்,ஈழத்துமக்களே எங்களை புரிந்துகொண்டு
இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டுதமிழர்களுக்கு காட்டவேண்டிய தேவையும்
காங்கிரஸ்ஆட்சிக்கு தேவையாக இருக்கிறது.யுத்தம் மிகமோசமாக முள்ளிவாய்க்காலின் கரையெங்கும் நடந்து கொண்டிருந்த போதே இதற்கான வேலைகளை இந்திய வெளியுறவு அமைச்சும், இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான ரோவும் செயற்படுத்த தொடங்கிவிட்டிருந்தார்கள்.
தேசியத்தலைவர் ஆழமாக ராசதந்திரம் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்
டு 2009 மே 18க்கு பின்னர் புறப்பட்டிருக்கும் கனவான்வான்களில் சிலர் முள்ளிவாய்க்கால்ப் பொழுதுகளில் சிவசங்கர் மேனனுடனும், விஐய்நம்பியாருடனும்
கூட்டாக நின்று புகைப்படங்களுக்கு முகம்காட்டியதும் இதன் ஆரம்பம்தான்.
2009 மே யில் ஈழத்தமிழினம் பிய்த்து எறியப்பட்டு ஆறுமாதங்கள் முடிய முன்னரே
2009 இறுதியில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி சென்ற இன்னுமொரு இராசதந்திர
தமிழர் அங்கு இந்தியாவின் இளவரசர் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு வந்து
வந்திருந்தார்.
இராகுல்காந்தியின் உடம்பில்ஓடும் ரத்தத்துக்குகூட அந்த இங்கிலாந்துதமிழ் பிரமுகர் ‘அது உண்மையிலேயே ஐரோப்பியரத்தம்தான் என்றும் சான்றிதழ்கூட கொடுத்தும் இருந்தார். ஏனென்றால் இவர் சொன்ன ஈழத்தமிழம்மக்களின் அவலங்களை எல்லாம் ராகுல்காந்தி மிகவும் கவனத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். இன்று சோனியாவுக்கு இங்குசில தமிழர்கள் கொடுக்கும் அதே சான்றிதழான ‘எங்கடை பிரச்சனைகளை அவர் மிக அனுதாபத்துடனும்,மிக அவதானத்துடனும் கேட்டுத்தெரிந்து கொண்டிருந்தார் என்பதன் ஆரம்பம் அடிபணிவுஅரசியல்தான் இனிமேல் என்று ஒருசிலர் முடிவு எடுத்தபோதே முளைவிட்டுவிட்டது.
சோனியாகாந்தியும் கொஞ்சமும் குறைந்தவர் இல்லைதான்.அவரை ஒரு ஏதும் தெரியாத,எல்லாம் மறந்துபோன கஜனிபட சு10ர்யாபோல புலம்பெயர்தமிழ் மேத்தி
ரிகள் வர்ணிக்கிறார்கள்.அவரும் அதற்கு ஏற்றாற்போல,தனக்கு ஏதோ இவர்கள்
விளங்கப்படுத்துவதற்கு முன்னர் ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்கள் ஏதும்
புரிபட்டு இருக்கவில்லை என்பதபோல,இப்போதுதான் சிதம்பரசக்கரத்தின் முடிச்சுகள் அவிழ்ந்தது போலவும் தான் ஈழத்தமிழர்களின் பக்கத்திலேயே நிற்பேன்’ என்றும் சொல்லி இருக்கிறார்.
இதில் மிகவேடிக்கையான விடயம் என்ன வென்றால் சந்திப்பு நடந்ததாக இருதரப்பும் சொல்லும் 11நிமிடங்களுக்குள் நமது புலம்பெயர் ராசதந்திரிகள் தமது விளக்கங்களை சொன்னதும்,அந்த 11 நிமிடங்களுக்குள் சோனியா மிக இலகுவாக அவற்றை கிரகித்துக்கொண்டதும் ஆகும். தமிழர்களின் 60வருட விடுதலைப்போராட்டத்தை 11 நிமிடங்களுக்குள் சொல்லிப்புரியவைக்க இவர்கள் மிகவும் கஸ்டப்பட்டிருப்பார்கள்.
இந்த சந்திப்பு இரகசியமானது என்று நம்ம புத்திமான்களும், இந்த சந்திப்பின்
வுpடயங்கள் வெளியே தெரியப்படுத்த முடியாதது என்று நமது புலம்பெயர் டிப்லோமற்றிகுகளும் சொல்லிக்கொண்டும், பேட்டிகளில் முழங்கிக்கொண்டு இருக்கும்போதே இந்தியாவின் ஊடகங்களில் ஈழத்தமிழர்கள் சோனியாவை
ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றும் ஈழத்தமிழர்களின் மனங்களை சோனியா
வென்றுவிட்டார் என்றும் செய்திகள் முன்பக்கத்தில் வெளியிட்டபிறகும்கூட
இந்த சந்திப்பு சோனியாவுக்கு எந்தவித்தில் உதவுவதற்காக அமைக்கப்பட்டு
விட்டதை இவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை.
அண்மையில்கூட விக்கிலீக்ஸ் இன்னுமொரு உண்மையை வெளியிட்டு இருந்தது.சிங்களம் நடாத்திய கொடும்தாக்குதல்களை நிறுத்தும்படி இறுதிநேர
த்தில் மேற்குநாடுகளும், லத்தீன்நாடுகளும் கொடுத்த ராசதந்திர நெருக்கடிகளை
சாந்தப்படுத்தி, இறுதிவரை தாக்குதலை நடாத்த இந்தியவே உதவியது என்று
சுட்டிக்காட்டியுள்ளது. ஓன்றை இவர்கள் தெளிவாக புரிpந்துகொள்ளவேண்டும். தமிழீழவிடுதலைப்போராட்டத்தை சிதைப்பதற்கு 80களின் ஆரம்பத்தில் சந்திரசேகரன் என்ன செய்தாரோ, இப்போது லோக்கல் அதிகாரி ஜாபர்சேட் என்ன செய்துகொண்டு இருக்கிறாரோ அதனை எல்லாம் தீர்மானிக்கும் சக்திதான் சோனியாவும் அவரின் ஆளும்கட்சியும்.
இந்தியாவின் கைப்பொம்மை முதல்வர் வரதராசப்பெருமாளை ஒரிசாவில் தங்க
வைத்து இருந்ததும்,இப்போது பரந்தன்ராஜனை சாணைதீட்டுவதும் இதே சோனியாவின் அதிகாரவர்க்கம்தான். யுத்தத்தை நிறுத்தும் இறுதி ஆயுதமான ஐநா சபையின் பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் சிங்களத்துக்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த தீர்மானத்தை இல்லாமல் செய்ததும் இதே சோனியாதான்.
அண்மையில் தென்சு10டான் சர்வசனவாக்கெடுப்பில் விடுதலைபெறுவத உறுதியான
போது தமிழீழத்தின் அச்சுவேலிப்பகுதியை சேர்ந்த ஒரு கவிஞர் உதயன் பத்திரி
கையில் எழுதியிருந்த கவிதையின் ஒரு வாசகத்தை இப்போது சோனியாவுக்கு
ஒன்றும்தெரியாத உத்தமர் என்று சான்றிதழ்கொடுக்கும் பெருமான்கள் திரும்பதிரும்ப வாசித்துபார்க்கட்டும்.
ஒற்றைத் தாலிக்காய்
ஒருலட்சம் தாலிகேட்ட
இத்தாலிக்காரி எவளும்
இருக்கவில்லையா
உனக்கிடைஞ்சலாய்..?

குர்ஆனில் சிலந்தியின் வீடு

குர்ஆன் கூறும் சிலந்தியின் வீடு ஓர் அறிவியல் அற்புதம்
அய்னுஷ்-ஷம்ஸு பல்கலைக்கழகத்தின் விவசாயக்கல்லூரியில் பணியாற்றும் பூச்சிகள் தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் அல்யம்மீ பின்வரும் தகவலைக் கூறுகிறார்:-
குர்ஆனில் அல்லாஹ் சிலந்தியை உதாரணமாகக் கூறுகிறான்.

مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتاً وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ لَوْ كَانُواْ يَعْلَمُونَ

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
இந்த வசனத்தில் இத்தகதத் பைத்தன் (اتخذت بيتا ) ‘ அது வீட்டைக் கட்டியது’ என்று இறைவன் ஆண்பாலில் துவங்கி ‘கட்டியது’ என்ற வினைச்சொல்லை பெண்பாலில் கூறியுள்ளான். இலக்கண மரபுப்படி ஆண்பாலுக்குப்பிறகு பயனிலையை ஆண்பாலாகத்தான்; கூறவேண்டும். ஆனால் இங்கே பெண்பாலாகக் கூறியதைப் பார்க்கும் போது இலக்கணப்பிழையாகத் தோன்றலாம்.
இது மனிதன் இயற்றிய சொல்லாக இருந்தால் இலக்கணத்தில் தவறு நிகழ்ந்ததாக நினைத்து விட்டுவிடலாம். ஆனால் உலகின் அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவன் அன்கபூத்தைப் பற்றிக் கூறும்போது அவனது சொல்லில் இலக்கணத்தவறு நிகழமுடியாது. அவ்வாறு அவன் கூறியிருந்தால் ஏற்கத்தக்க காரணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும் என ஆய்வு தொடர்ந்தது.
அவை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. அன்கபூத் என்ற சொல் இலக்கண மேதைகளால் ஆண்பாலிலும் பெண்பாலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஆண்பால் அன்கப் என்பதாகும். அன்கபூத் என்பது ஆண், பெண் இனத்தையே குறிக்கும் பொதுவான சொல்லாகும். ஆகவே இதில் இலக்கணத் தவறு நிகழவில்லை.
2. அன்கபூத்: ஆண் பெண் சிலந்தியில் ஆண் சிலந்தி வலை பின்னாது. பெண் சிலந்தி மட்டும் தான் அதன் வலையைப் பின்னமுடியும்; என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர். காரணம் அதன் உடல் அவ்வாறு படைக்கப்பட்டுள்ளது.அதன் அடிவயிற்றில் பசைபோன்ற திரவம் வெளியாகிறது. மாததந்திர ருது போன்ற ஒரு செயல் அதில் நிகழ்கிறது.
3. பெண்சிலந்தி பருவ வயதை அடையும் போது தனது உறவுக்காக இவ்வாறு வீட்டை எழுப்புகிறது. ஆண் சிலந்தி வலிமை பெற்றிருந்தும்; அதனால் வீடு கட்ட முடியாது.
4. பெண் சிலந்தியின் வயிற்றில் உற்பத்தியாகும் நூலில் பசை இருக்கும். ஏதிரிப் பூச்சிகள் அதன் மீது வந்தமர்ந்தால்; அதில் அவை ஒட்டிக் கொள்ளும். அவை அதற்கு உணவாக ஆகிவிடுகிறது.
எனவே வலைபின்னும் இச்செயல் பெண் இனத்தில் தான் நிகழ முடீயும் என்பதால் தான் அல்லாஹ் பெண்பாலில் கூறியுள்ளான்.
1400 ஆண்டுகளுக்கு முன் பெண் இனம் தான் வலை பின்னும் என்பது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு எவ்வாறு தெரிந்திருக்க முடியும்? ஆகவே சிலந்தியைப் படைத்த இறைவன் தான் இந்த பேருண்மையை உலகுக்குக் கூற முடியும்.ஆகவே இறைவனின் வேதமான அல்-குர்ஆன் அல்லாஹ்வின் அருள்மறை என்பது இ;தன் மூலம் நிரூபணமாகிறது.